ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (2011) தூதராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (பிப். 19 & ஏப். 2) நடத்தவுள்ளன. இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ தூதராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.
சச்சின் தனது 6வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் மட்டுமே 6 உலக கோப்பையில் விளையாடியுள்ளார். அவரது சாதனையை சச்சின் சமன் செய்கிறார்.
‘மீண்டும் உலக கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளேன். இந்த மாபெரும் போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பையை வென்று சாதனை படைக்கும்’ என்று சச்சின் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment